சமத்துவ மக்கள் கட்சி
இதன் தலைவர் சரத் குமார். நாட்டாமை என்னும் படத்தில் "நெல்லு போட்டால் நெல்லு விளையும் கொள்ளு போட்டால் கொள்ளு விளையும்" என்று விவசாயிகள் அறியாத உண்மையை விவசாயிகளுக்கே புரியவைத்தவர். மேலும் இவர் சூரியவம்சம் படத்தில் ஒரே பாட்டில் எப்படி பணக்காரர் ஆவது என்பது போல பல கருத்துக்களை தமிழ் மக்களுக்கு புரியவைத்தவர்.
ஆகையால் இவர் தமிழகத்தை ஆழ தகுதி உடையவராய் தமிழர்களால் ஆக்கப்பட்டவர். இவர் ச.ம.க வை நிறுவி தொடர்ந்து தீவிர அரசியல் செய்து வருகிறார். இவர் டெபாசிட் போனாலும் கூட கவலையில்லை ஆனால் நாம் ஒரு நாள் ஆட்சியை பிடிக்க மாட்டோமா? என்று ஏங்குபவர்.
எல்லாம் தலைஎழுத்து.......
இளைய தளபதி விஜய்
இவர் டாக்டர் விஜய் என்று போற்றபடுபவர். இவர் படத்தில் வில்லன்களை துவைப்பதால் தளபதி ஆகிவிட்டார். இவர் நடிக்கத பாத்திரமே இல்லை. I.P.S அதிகாரி, ரௌடி, கல்லூரி மானவர் என்று பல கூத்துக்களையும் இவர் செய்துள்ளார். இப்படி படத்தில் நடித்து கைதட்டல் பெற்றதால் இவருக்கும் நாட்டை ஆழ ஆசை வந்து விட்டது. இவரும் அரசியலுக்கு வருவேன் என்று ஒற்றை காலில் நிற்கிறார். இவர்களையெல்லாம் பார்த்ததற்கு பிறகு தான் தெரிந்தது அரசியலை ஏன் சாக்கடை என்கிறார்கள் என்று.
இவர் மீனவர்களுக்கு குரல் கொடுக்கிறார், பல நன்மைகளை மக்களுக்கு செய்கிறார் என்கிறார்கள். எந்த ஒரு செயலுமே அதன் குறிக்கோளை வைத்துத் தான் அது நல்ல செயலா அல்லது அது கெட்ட செயலா என்று முடிவுக்கு வர வேண்டும். இல்லையென்றால் ஒரு ராணுவ வீரன் கொலை வெறியன் என்றே சொல்லப்படுவான். ராணுவ வீரனின் குறிக்கோள் நாட்டை பாதுகாப்பது ஆகையால் அவன் செய்யும் கொலை நல்ல செயல் ஆகிறது. விஜயின் குறிக்கோள் நாட்டை ஆழ வேண்டும் என்பதே தவிர மக்கள் மீது கொண்ட அக்கரை அல்ல.
படத்தில் நடிப்பவர்கள் யாரும் பொருளாதார வல்லுனர்களோ, அரசியல் நிபுணர்களோ அல்ல. இவர்கள் கூத்தாடிகள் இவர்களுக்கு நடிக்க மட்டுமே தெரியும். இவர்கள் திரையரங்கை ஒரு பிரச்சார இடமாக பயன்படுத்தி மக்களிடம் செல்வாக்கை பெறுகிறார்கள். பிறகு அதை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க போராடுகிறார்கள். ஒரு அறிஞர் ஜனநாயகத்தை பற்றி சொன்னது "11 முட்டாள்களும் 10 அறிவாளிகளும் ஒன்றாய் சேர்ந்து மொத்தம் 21 முட்டாள்களாய் நாட்டை ஆள்வதற்கு பெயர் ஜனநாயகம்". இது தமிழர்களுக்கு முற்றிலும் பொருந்தும்.
Sunday, 20 February 2011
Wednesday, 16 February 2011
களப்பிரர் காலம்-2
இலச்சிய திராவிட முன்னேற்ற கழகம்
இந்த கட்சியின் தலைவர் T.R என்று தமிழ் மக்களால் போற்றப்படும் ஒரு நடிகர். இவரது கட்சிக்கு மட்டும் தான் இலச்சியம் இருப்பதை போன்று இலச்சியம் என்ற வார்த்தையை இவர்கட்சி பெயரிலேயே வைத்துள்ளார். இவரது சிறப்பே இவரது அடுக்கு மொழி. அடுக்கு மொழியால் பேசினால் ஆட்சியை கைபற்றி விடலாம் என்பதை முதலில் நம்மிடையே அறிமுகப் படுத்தியவர் அண்ணா. படத்தில் நடித்தால் ஆட்சியை பிடிக்கலாம் என்று நம்மிடம் அறிமுக படுத்த்தியவர் MGR. புத்திசாலியான இவர் அடுக்கு மொழியால் பேசுவது, படத்தில் நடிப்பது என்று இரெண்டையும் கலந்து இவரது இலச்சியத்தை நோக்கி நகர்கிறார். ஆனால் இவர் இவரது இலச்சியத்தை கட்சி தொண்டர்களுக்கு கூட தெரியாமல் ரகசியமாக வைத்துள்ளார் என்பது இந்த கட்ச்சியின் பெரிய சிறப்பு.
இவரது சிறப்புகளை இவரது அடுக்கு மொழிகளை போலவே அடுக்கிக்கொண்டே போகலாம். இவர் அந்த காலத்திலேய தொட்டான்குச்சியைய் தட்டிப்பார்த்து அண்ணன் தங்கை பாசத்தை தமிழர்களுக்கு உணர்த்தி பலத்த கைதட்டலை பெற்றவர். இவர் சகல கலா வல்லவர், அதாவது ஆடுவது பாடுவது, நடிப்பது, பேசுவது, அரசியல் என இவர் கால் பதிக்காத துறையே இல்லை. அதனால் இவரை பார்த்த பலரும் அண்டார்டிகாவில் இருந்து வந்த அதிசய பிறவியை பார்ப்பதை போலவே பார்கிறார்கள்.
இவர் நடித்த படம் ஒன்றில் ஒரு சண்டையின் போது இவர் சொன்ன "வாடா ஏ மச்சி; வாழைக்க பஜ்ஜி" என்ற அடுக்கு மொழி அனைத்து தமிழர்களின் மனதிலும் பசுமரத்து ஆணி போல் பதிந்தது. எங்கேயாவது சண்டை நடந்தால் கூட மக்கள் இந்த மந்திரத்தை மூன்று முறை சொல்லியே பிறகே சண்டைக்கு போகிறார்கள் என்று பல செய்திகள் நமக்கு கிடைக்கிறது. இப்படி சிறப்பு மிக்க இவர் வாரம் தோறும் அரட்டை அரங்கம் என்னும் நிகழ்ச்சியில் தோன்றி சன்டிவிக்கு சிறப்பு செய்கிறார்.
இவர் மகன் நடித்த படம் ஒன்றில் இவர் பாடிய பாட்டு இவரது சாதனைகளில் குறிப்பிடத்தக்கது. "யம்மாடி, ஆத்தாடி உன்னே எனக்கு தரியாடி; நீ பாதி நான் பாதி .....; அரச்ச மாவ அரப்போமா? தொவச்ச துணிய தொவப்போமா?;....." என்று தமிழர்களை பார்த்து இவர் கேட்டவுடன், திரை அரங்கில் இருந்த தமிழர்கள் யம்மாடி ஆத்தாடி என்று அலறி அடித்து ஓடினர்.
இப்படி தமிழர்களின் அறிவு வளர அறிவு சார் அடுக்குமொழிகள் பலவற்றை இவர் பேசுவதால் இவர் தமிழகத்தை ஆழ தகுதி உடையவர் ஆகிறார். ஆகையால் இவர் கட்சி ஆரம்பித்து தமிழகத்துக்கு தொண்டாற்றி வருகிறார்.
FORWARD BLOCK:
இப்படி ஒரு கட்சி இருப்பது பல நாள் ஆராய்ச்சிக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு அரசியலை பற்றி தெரியா விட்டாலும் ஆட்ச்சியை பிடிக்க வேண்டும் என்று அயராது உழைப்பவர்.
இது போன்ற கூத்தாடிகளே தமிழக அரசியலில் முக்கிய பாத்திரம் வகிப்பது எமக்கு வேதனை அளிக்கிறது. ஏனைய கூத்தாடிகள் வரும் பதிப்புகளில் தவறாமல் போற்றப்படுவர். தமிழர்களின் கலாச்ச்சார சீரழிவுக்கும், மொழி சிதைவுக்கும் காரணமே இந்த கூத்தாடிகள் தான். ஆகையால் தமிழக சினிமாவை முதலில் புறக்கணியுங்கள் இவர்களின் ஆட்டம் தானே ஒரு முடிவுக்கு வரும்.
இந்த கட்சியின் தலைவர் T.R என்று தமிழ் மக்களால் போற்றப்படும் ஒரு நடிகர். இவரது கட்சிக்கு மட்டும் தான் இலச்சியம் இருப்பதை போன்று இலச்சியம் என்ற வார்த்தையை இவர்கட்சி பெயரிலேயே வைத்துள்ளார். இவரது சிறப்பே இவரது அடுக்கு மொழி. அடுக்கு மொழியால் பேசினால் ஆட்சியை கைபற்றி விடலாம் என்பதை முதலில் நம்மிடையே அறிமுகப் படுத்தியவர் அண்ணா. படத்தில் நடித்தால் ஆட்சியை பிடிக்கலாம் என்று நம்மிடம் அறிமுக படுத்த்தியவர் MGR. புத்திசாலியான இவர் அடுக்கு மொழியால் பேசுவது, படத்தில் நடிப்பது என்று இரெண்டையும் கலந்து இவரது இலச்சியத்தை நோக்கி நகர்கிறார். ஆனால் இவர் இவரது இலச்சியத்தை கட்சி தொண்டர்களுக்கு கூட தெரியாமல் ரகசியமாக வைத்துள்ளார் என்பது இந்த கட்ச்சியின் பெரிய சிறப்பு.
இவரது சிறப்புகளை இவரது அடுக்கு மொழிகளை போலவே அடுக்கிக்கொண்டே போகலாம். இவர் அந்த காலத்திலேய தொட்டான்குச்சியைய் தட்டிப்பார்த்து அண்ணன் தங்கை பாசத்தை தமிழர்களுக்கு உணர்த்தி பலத்த கைதட்டலை பெற்றவர். இவர் சகல கலா வல்லவர், அதாவது ஆடுவது பாடுவது, நடிப்பது, பேசுவது, அரசியல் என இவர் கால் பதிக்காத துறையே இல்லை. அதனால் இவரை பார்த்த பலரும் அண்டார்டிகாவில் இருந்து வந்த அதிசய பிறவியை பார்ப்பதை போலவே பார்கிறார்கள்.
இவர் நடித்த படம் ஒன்றில் ஒரு சண்டையின் போது இவர் சொன்ன "வாடா ஏ மச்சி; வாழைக்க பஜ்ஜி" என்ற அடுக்கு மொழி அனைத்து தமிழர்களின் மனதிலும் பசுமரத்து ஆணி போல் பதிந்தது. எங்கேயாவது சண்டை நடந்தால் கூட மக்கள் இந்த மந்திரத்தை மூன்று முறை சொல்லியே பிறகே சண்டைக்கு போகிறார்கள் என்று பல செய்திகள் நமக்கு கிடைக்கிறது. இப்படி சிறப்பு மிக்க இவர் வாரம் தோறும் அரட்டை அரங்கம் என்னும் நிகழ்ச்சியில் தோன்றி சன்டிவிக்கு சிறப்பு செய்கிறார்.
இவர் மகன் நடித்த படம் ஒன்றில் இவர் பாடிய பாட்டு இவரது சாதனைகளில் குறிப்பிடத்தக்கது. "யம்மாடி, ஆத்தாடி உன்னே எனக்கு தரியாடி; நீ பாதி நான் பாதி .....; அரச்ச மாவ அரப்போமா? தொவச்ச துணிய தொவப்போமா?;....." என்று தமிழர்களை பார்த்து இவர் கேட்டவுடன், திரை அரங்கில் இருந்த தமிழர்கள் யம்மாடி ஆத்தாடி என்று அலறி அடித்து ஓடினர்.
இப்படி தமிழர்களின் அறிவு வளர அறிவு சார் அடுக்குமொழிகள் பலவற்றை இவர் பேசுவதால் இவர் தமிழகத்தை ஆழ தகுதி உடையவர் ஆகிறார். ஆகையால் இவர் கட்சி ஆரம்பித்து தமிழகத்துக்கு தொண்டாற்றி வருகிறார்.
FORWARD BLOCK:
இப்படி ஒரு கட்சி இருப்பது பல நாள் ஆராய்ச்சிக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு அரசியலை பற்றி தெரியா விட்டாலும் ஆட்ச்சியை பிடிக்க வேண்டும் என்று அயராது உழைப்பவர்.
இது போன்ற கூத்தாடிகளே தமிழக அரசியலில் முக்கிய பாத்திரம் வகிப்பது எமக்கு வேதனை அளிக்கிறது. ஏனைய கூத்தாடிகள் வரும் பதிப்புகளில் தவறாமல் போற்றப்படுவர். தமிழர்களின் கலாச்ச்சார சீரழிவுக்கும், மொழி சிதைவுக்கும் காரணமே இந்த கூத்தாடிகள் தான். ஆகையால் தமிழக சினிமாவை முதலில் புறக்கணியுங்கள் இவர்களின் ஆட்டம் தானே ஒரு முடிவுக்கு வரும்.
Wednesday, 9 February 2011
இரண்டாம் களப்பிரர் காலம்...
சினிமா ஆட்சி கடந்த முப்பது ஆண்டுகளாக நடக்கும் ஒரே மாநிலம் தமிழகமாகத்தான் இருக்க முடியும். நடிகர்கள் என்பவர்கள் நடிப்பவர்களே, அவர்களுக்கு அரசியலில் நல்லவர்கள் போல நடிப்பதற்கு பெரிய கஷ்டம் ஏதும் இருக்காது. இவர்களுக்கு தமிழ் மீதும் தமிழ் மக்கள் மீதும் என்ன அக்கரை இருக்கிறது என்று தான் தெரியவில்லை. இவர்கள் படங்களில் தங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிற மொழிகழந்து தான் தமிழை பேசுவார்கள் அந்த அளவுக்கு தமிழ் மொழி மீது பற்று. பல நடிகர்களுக்கு இன்னும் தமிழே தெரியாது ஆனால் அவர்கள் தான் தமிழரை பற்றி அதிகம் பேசுவார்கள்(குஷ்பூ- இவர் தமிழ் குடும்பங்கள் உருப்பட பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்).
படத்திற்கு வசனம் எழுதியதற்கு பரிசு "தமிழக முதல்வர்" பதவி. எவ்வளவு பெரிய பரிசு. நாம் படித்த வரையில் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் கூட நாட்டை ஆளவில்லை. ஆனால் படத்துக்கு வசனம் எழுதியவர் நாட்டை ஆள்கிறார். படத்தில் நடித்தால் நாட்டை ஆளலாம் என்ற முடிவில் பல நடிகர்கள் உலவுகிறார்கள்.
நாட்டை ஆள்வதோடு மட்டும் நிற்ப்பதில்லை ஆதிக்கம் செலுத்துவதும் இவர்கள் தான். இன்றைய கட்சிகளில் பல கட்சிகள் இவர்கள் கையில் தான்.
Forward block -Karthi
சமத்துவ மக்கள் கட்சி- நடிகர் சரத்குமார்
லச்சிய திராவிடர் முன்னேற்ற கழகம்- நடிகர் டி. ராசேந்திரன்
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்- நடிகர் விஜயகாந்த்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்- நடிகையாய் இருந்த செல்வி ஜெயலலிதா
திராவிட முன்னேற்ற கழகம் -வசனம் எழுதிய கருணாநிதி
நாம் தமிழர்- நடிகர் சீமான்
இப்படி பல கட்சிகள் சினிமாவின் பிடியில். கட்சிகள் மட்டும் இவர்கள் கையில் இல்லை, பல MP, MLA என்று சுற்றுகிறார்கள்.
நெப்போலியன், ரித்திஷ், எஸ். வீ. சேகர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். மக்கள் ஒன்று பட்டு நின்றாலும் இவர்கள் ஒருபோதும் ஒன்று படமாட்டார்கள்.
வெள்ளையன் வெளியேறிய பிறகு ஆரியர் ஆதிக்கம், பார்ப்பனர் ஆதிக்கம், இன்று சினிமா ஆதிக்கம். இப்படி நம்மீது யாரவது ஒருவர் ஆதிக்கம் செலுத்திக்கொண்டே தான் இருக்கிறார்களே ஒழிய நாம் அடிமை என்ற நிலைமை நீங்கவில்லை. உலக தமிழர்களின் தலைஎழுத்தை எழுதுவதே இந்த சினிமாதான் என்பதை நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.
தமிழர்கள் நிழலுக்கும் நிஜத்துக்கும் வேறுபாடு அறியாதவர்கள் அல்ல. நம்மை சினிமாவால் திறமையாக நம்பவைக்கிறார்கள் என்பதே உண்மை. என்னதான் செய்வது, நம் வாக்குரிமையை நமது கட்சி வெற்றி பெறவேண்டும் என்பதற்கு பதிலாக நமக்கு பிடிக்காத கட்சி வரகூடாது என்பதற்காகவாவது அனைவரும் தம் ஓட்டு உரிமையை பயன்படுத்த வேண்டும்.
வரும் பதிவுகளில் நடிகர்களின் பல சிறப்பு அமசங்களை காண்போம்....
படத்திற்கு வசனம் எழுதியதற்கு பரிசு "தமிழக முதல்வர்" பதவி. எவ்வளவு பெரிய பரிசு. நாம் படித்த வரையில் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் கூட நாட்டை ஆளவில்லை. ஆனால் படத்துக்கு வசனம் எழுதியவர் நாட்டை ஆள்கிறார். படத்தில் நடித்தால் நாட்டை ஆளலாம் என்ற முடிவில் பல நடிகர்கள் உலவுகிறார்கள்.
நாட்டை ஆள்வதோடு மட்டும் நிற்ப்பதில்லை ஆதிக்கம் செலுத்துவதும் இவர்கள் தான். இன்றைய கட்சிகளில் பல கட்சிகள் இவர்கள் கையில் தான்.
Forward block -Karthi
சமத்துவ மக்கள் கட்சி- நடிகர் சரத்குமார்
லச்சிய திராவிடர் முன்னேற்ற கழகம்- நடிகர் டி. ராசேந்திரன்
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்- நடிகர் விஜயகாந்த்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்- நடிகையாய் இருந்த செல்வி ஜெயலலிதா
திராவிட முன்னேற்ற கழகம் -வசனம் எழுதிய கருணாநிதி
நாம் தமிழர்- நடிகர் சீமான்
இப்படி பல கட்சிகள் சினிமாவின் பிடியில். கட்சிகள் மட்டும் இவர்கள் கையில் இல்லை, பல MP, MLA என்று சுற்றுகிறார்கள்.
நெப்போலியன், ரித்திஷ், எஸ். வீ. சேகர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். மக்கள் ஒன்று பட்டு நின்றாலும் இவர்கள் ஒருபோதும் ஒன்று படமாட்டார்கள்.
வெள்ளையன் வெளியேறிய பிறகு ஆரியர் ஆதிக்கம், பார்ப்பனர் ஆதிக்கம், இன்று சினிமா ஆதிக்கம். இப்படி நம்மீது யாரவது ஒருவர் ஆதிக்கம் செலுத்திக்கொண்டே தான் இருக்கிறார்களே ஒழிய நாம் அடிமை என்ற நிலைமை நீங்கவில்லை. உலக தமிழர்களின் தலைஎழுத்தை எழுதுவதே இந்த சினிமாதான் என்பதை நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.
தமிழர்கள் நிழலுக்கும் நிஜத்துக்கும் வேறுபாடு அறியாதவர்கள் அல்ல. நம்மை சினிமாவால் திறமையாக நம்பவைக்கிறார்கள் என்பதே உண்மை. என்னதான் செய்வது, நம் வாக்குரிமையை நமது கட்சி வெற்றி பெறவேண்டும் என்பதற்கு பதிலாக நமக்கு பிடிக்காத கட்சி வரகூடாது என்பதற்காகவாவது அனைவரும் தம் ஓட்டு உரிமையை பயன்படுத்த வேண்டும்.
வரும் பதிவுகளில் நடிகர்களின் பல சிறப்பு அமசங்களை காண்போம்....
Subscribe to:
Posts (Atom)