Sunday, 19 December 2010

தமிழர்கள் தீயவர்கலாம்..

நம் தமிழ் இனத்தில் நல்லவர்களே பிறக்க மாட்டார்களா? நம் இனம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறது இப்படியெல்லாம் என்னை சிந்திக்க வைத்தது சில வரலாற்று சம்பவங்கள் தான். ஏதோ எனக்கு தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.முதலில் ராமாயணத்தில் ராவணன் கெட்டவனாக சிறப்பாக சித்தரிக்கப்பட்டான். சரி ராவணன் கெட்டவனாக இருக்கட்டும் அவன் தம்பி விபீஷணன் "தான் என்றுமே நல்லவனாக இருக்க வேண்டும்" என்று வரம் வாங்கினான். அவனும் ராவணனை ஆதரிக்காமல் நல்லவனாகவே இருந்தான். எனினும் அவன் கெட்டவனாம் காரணம், தம்பி போரில் தன் அண்ணனை ஆதரிக்கவில்லையாம். (என்ன கொடும சார் இது?)

சரி இது போகட்டும் பலர் இந்த கதையை நம்புவது கூட கிடையாது. ஆனால் நம்புமாறு ஒரு வரலாற்றை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அது தான் சித்தூர் கொங்கன் படை திருவிழா. அந்தக்காலத்தில் பாலக்கடும் கொங்கு நாடும் இந்தியா பாகிஸ்த்தனை போல இருந்ததாம். 918AD யில் கொங்கு நாட்டிற்க்கும் பாலக்கட்டிர்க்கும் போர் ஆரம்பித்து விட்டது. கிழக்கில் ராசாதி ராசன் தலைமையிலான கொங்கு நாட்டு ராணுவமும் மேற்கில் ஒருங்கிணைந்த கொச்சின், சமோரின், பாலக்காடு மான்னர்களுக்கும் இடையே போர் துவங்கியது. ஒருங்கிணைந்த கேரளா ராணுவத்தின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத கொங்கு நாட்டு ராணுவம் பின் வாங்கி போர் முடிவுக்கு வந்த்ததாம். இந்த வெற்றியைத் தான் சித்தூர் மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

இதற்க்கு இடையில் தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான கதை உள்ளது. போர் நடந்த சித்தூரில்,காளியே நேராக போர் களத்திற்கு வந்து
"சித்தூர் தாண்டுனா காட்பாடி
பாலக்காட்ட சீண்டுனவன் dead body"
என்று சொல்லி கடுமையாக போரிட்டு தமிழர்களின் தாக்குதலை முரியடித்ததாம். அந்த கடவுளுக்கு மக்கள் மீதுள்ள அக்கரையை பாருங்கள். தமிழனை அளிக்க கடவுள் கூட போர் களத்திற்கு வருவாராம்.

இப்படி பட்ட கடவுள் அனைவருக்கும் பொதுவாக இருந்தால் ஈழப்போரில் தமிழனை காக்க வந்திருக்க வேண்டும் ஆனால் அப்படி எதுவும் இதுவரையில் நடக்கவில்லை இனியும் நடக்கப்போவதில்லை. தமிழனை அளிக்க துடிக்கும் இனங்கள் தான் எத்தனை எத்தனை.
இதற்க்கு காரணம் தான் என்னவோ?. இவை தமிழனின் அழிவோடு போவதில்லை. இதை சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறார்கள் என்பது தான் எனது வருத்தம். கொங்கன் படை கிபி 918 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த வரலாறு தமிழரில் பலருக்கு தெரிந்திருப்பதாக தெரியவில்லை. இதிலும் குறிப்பாக கொங்கு நாட்டு மன்னன் ஏன் போர் தொடுத்தான்? என்ற வரலாறு எனக்கு கிடைக்கவில்லை கிடைத்தால் அதை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இன்றைய நிலை தமிழன் அழிந்தால் அழுவதற்கு கூட ஆள் இல்லை. வழக்கம் போல உலகமே கொண்டாடி மகிழ்கிறது.

மேலும் விவரங்களுக்கு அணுகுங்கள் இதை:
http://www.webindia123.com/city/kerala/palakkad/destinations/eventsandfestivals/chitturkonganpada.htm

http://chitturfolks.webs.com/knowchittur.htm

ஒரு நாள் விடியும்.............

1 comment:

  1. anna these r very real facts of today but we should go one step ahead to express our thoughts im thinking of that in what ways we can do it you find the ways and lets all spread awareness and i will be with you always

    ReplyDelete