Thursday, 7 October 2010

முத்து மணி மாலை...

நம்ம இந்தியா வரலாற்றை பற்றி சொல்லனுமா என்ன?.. இது வரைக்கும் ஒரு நாட்டு மேல படைஎடுத்துருப்போமா?(தமிழர்களை தவிர) நாம யாருக்கு என்ன பாவம் பண்ணுனோம்? ஏன் நமக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது என்று என்னை சிந்திக்க வைத்தது இந்த முத்து மணி மாலைதான். முத்து மணி மாலை..... என்று பாட்டை மட்டும் கேட்டு பழகிய நமக்கு இது புதுசு தான். அது தான் சீனா வின் string of pearls strategy. இது இந்தியாவை சுத்தி வளைத்து இந்திய பெருங்கடலிலும்,அரபு நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்துவது தான் இதன் முக்கிய நோக்கமே.

இப்படி நம் நாட்டை சுற்றி வளைக்க தங்களால் முடிந்ததை செய்வது நமது அருகில் உள்ள நாடுகளான இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், மியான்மர், நேபாளம் தான். இப்படி நாலு பக்கமும் சுத்தி வளைச்ச நாம எங்கதான் போறது.

போரா ஒரே அக்கபோர் என்று நினைப்பது நம் பண்பாடு அதனால் தான் மீனவர்கள் செத்தாலும் சரி, நம் இனத்தவர்கள் செத்தாலும் சரி நாம் எதுவும் கேட்க மாட்டோம். "செவியில் சங்கு வைத்து முழங்கினும் நீண்ட துயில் கொள் தமிழா.." என்று சொன்னது தமிழருக்கு சரியாக பொருந்தும். கும்பகர்ணன் கூட 6 மாதத்திற்கு பிறகு விழிப்பான் ஆனால் 600 ஆண்டுகுக்கு மேல்(பாண்டியர் வீழ்ச்சிக்குப் பின்) தூங்கும் தமிழர் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைய தமிழர்களிடம் எந்திர்ரா(விழித்தெழு) எந்திர்ரா(விழித்தெழு) என்றால் எந்திரா எந்திரா என்று திரைப்படத்தின் பெயரையே சொல்லுவார்கள் என்பது திண்ணம்.

1 comment:

  1. பாண்டியருக்கு பின் பன்னிகள் ஆண்டாள் நாம் என்ன தான் பண்ணுவது ....சீனா வும் வளைக்கும் சனியனும் வளைக்கும்

    ReplyDelete