Thursday, 8 July 2010

அகதி ....


1959இல் திபதிய மக்கள் தலாய்லாமாவுடன் ஆயிரக்ககணக்கில் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தனர்.
வந்தாரை வாழவைக்கும் இந்தியா அவர்களுக்கு ஆதரவு கொடுத்தது.கர்நாடகாவில் உள்ள பய்ளகுப்பே(Bylakuppe) என்ற இடத்தில் இந்திய அரசு 3000 ஏக்கர் நிலம் ஒதுக்கி அவர்களுக்கு அணைத்து உதவியும் செய்துவருகிறது.தரமான கல்வி,மருத்துவம் என்று தன் நாட்டு மக்களுக்கு ராமம் போட்டாலும் அவர்களுக்கு நிறையவே செய்கிறது இந்திய அரசு.இன்று பய்ளகுப்பே(Bylakuppe)இல் மட்டும் 14,000பேர் வசிக்கின்றனர்.இன்று பய்ளகுப்பே "குட்டி திபத்" என்று சொல்லும் அளவுக்கு திபத் ஆகவே மாறிவிட்டது.

நீங்களே குட்டி திபத்த பாருங்க "குட்டி திபத்"

இது இருக்கட்டும் இனி நம்ம கதைக்கு வருவோம் எல்லாம் நம்ம அப்பாவி ஈழ மக்கள் பற்றித்தான்.துயில் இல்லாத இரவுகள்,எங்கும் அழு
குரல்,பார்க்கும் திசை எல்லாம் இரத்தம்,தோண்டும் இடமெல்லாம் கன்னிவெடிகள்,
உயிர் இழந்து, உடமைகளை இழந்து நமது சொந்தங்கள் கைகொடுப்பார்கள் என்று எண்ணி கடல் கடந்து வந்தவர்கள்.அவர்களை தமிழர்கள் என்று பார்ப்பதை விட தீவிரவாதிகளோ என்ற சந்தேகத்துடன் மட்டுமே இந்திய அரசு பார்க்கிறது .இத்தாலியில் இருந்து இறக்குமதியான சோனியா காந்தி வளர்க்கும் நாய் தெற்கு பார்த்து குரைத்தால் கூட ஈழத்தமிழர்களால் ஆபத்து என்று சொல்லி அவர்களை வெளியே கூட வர அனுமதிப்பதில்லை.இந்த குற்றப்பார்வையை இந்திய அரசு கைவிடவேண்டும்.
திபத்தியர்களுக்கு கொடுக்க கூடாது என்பது என்னுடைய கருத்து இல்லை அனால் தமிழ் ஈழ மக்களையும் திபத்தியர்களை போல் நடத்த வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.இப்பொழுது இலங்கையில் திவிரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனியாவது நமது அரசு தாராளமாய் உதவ முன்வரவேண்டும்.





No comments:

Post a Comment